பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானதாக வதந்தி: குடும்பத்தினர் விளக்கம்..!

பழம்பெரும் நடிகர் சரத்பாபு சற்றுமுன் காலமானார் என்ற தகவல் உண்மையல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் சரத்பாபு இன்று காலமானார் என செய்தி வெளியான நிலையில் அவரது சகோதரி இந்த செய்தியை மறுத்துள்ளார்.

நடிகர் சரத் பாபு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் தற்போது வேறு ஒரு அறைக்கு தான் மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் காலமாகவில்லை என்றும் அவரது சகோதரி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

sarathbabuதயவுசெய்து சரத்குமார் சரத்பாபு குறித்து பொய்யான தகவல் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கூறிய எல்லார். சரத்பாபுவின் உடல் நலம் தற்போது படிப்படியாக தேடி வருவதாகவும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் முழுமையாக குணமானவுடன் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்

சரத்பாபு காலமானார் என்ற செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் உயிருடன் உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...