ஜோதிடம்

சனி தோஷம் நீக்கும் கெட்வெல் ஆஞ்சநேயர்

நெல்லையில் உள்ளது புகழ்பெற்ற கெட்வெல் ஆஸ்பத்திரி . தனியார் ஆஸ்பத்திரியான இந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கோவில்தான் கெட்வெல் ஆஞ்சநேயர். பொதுவாக ஆஞ்சநேயர் கோவில்தான் கெட்வெல் ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர் கெட்வெல் ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார்.

இங்கு ஒரே கர்ப்பகிரகத்தில் மஹா கணபதியும், ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார்கள். ஆஞ்சநேயர் மிகவும் வேகமான கடவுள். நமக்கு வேகமான நல்ல பலன்களை உடனே தருவார்.

இவரது வால் பகுதியில் 48 நாட்கள் தொடர்ந்து பொட்டு வைத்து வந்தால் அனைத்தும் நல்ல விதமாக நடக்கும் என்பது ஐதீகம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். மேலும் சனீஸ்வரன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்படுவோர், குறிப்பாக கண்டசனி, ஏழரை சனியால் அவதிப்படுவோர் இந்த ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.

இந்த   ஆஞ்சநேயரை வழிபடுவதால் எமபயம் நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள கெட்வெல் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் இவரை வணங்கி நோய்களில் இருந்து சுகம் பெறுகிறார்கள்.

திருநெல்வேலி சென்றால் இந்த ஆஞ்சநேயரை தவறாமல் தரிசித்து வாருங்கள்.

Published by
Abiram A

Recent Posts