கொரோனா லாக்டவுனில் சமூக வலைதளங்களில் போட்டோஷுட் புகைப்படங்கள், வீடியோக்கள் என பூஜா ஹெக்டே ஹேப்பியாக இருந்து வந்தார், யார் கண்ணு பட்டுச்சோ தெரியல நேற்று நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கு சிலரால் முடக்கப்படுள்ளதாகத் தெரிய வந்தது, மேலும் அம்மணி உடனே தொழில்நுட்ப குழுவினரை அணுகி 3 மணிநேரத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை சரி செய்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், இவரது ஸ்டேட்டஸில் சமந்தாவை விமர்சித்து ஒரு கருத்து பதிவிடப்பட்டு இருந்தது. அதும் பெரிய அளவில் சமந்தா ரசிகர்களிடையே கடும் கோபத்தினைக் கிளப்பியது. அதாவது, பூஜா ஹெக்டே ஸ்டேட்ஸில் “சமந்தா அப்படி ஒன்றும் அழகில்லையே” என்று பதிவிடப்பட்டு இருந்தது.
அந்த ஸ்டேட்டஸ் தான் போடவில்லை என்று பூஜா சொல்லியபோதும், யாரும் நம்பாத நிலையில் இயக்குனர் நந்தினி ரெட்டி, சமந்தா, சின்மயி மூவரும்
பூஜா ஹெக்டே குறித்து நக்கலாகப் பதிவிட, சமந்தா ரசிகர்கள் சமந்தா ஏன் இப்படி செய்தார் என்று தங்களது அதிருப்தியினைக் காட்டி வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பூஜா ஹெக்டேவிற்கு தங்களது ஆதரவினைத் தெரிவிக்க நினைத்து, #WesupportPoojaHegde என்ற ஹேஸ்டேக் உருவாக்கி நந்தினி ரெட்டி, சின்மயி, சமந்தா ஆகியோருக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.