சமந்தாவின் கணவர் பிறந்த நாளுக்கு நேர்த்தி- முட்டி போட்டு கோவில் படிக்கட்டில் ஏறிய வாலிபர்

இந்த ரசிகர்கள் என்பவர்கள் கதாநாயகர்களை பொறுத்தவரை அதையும் தாண்டி புனிதமானவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் தனக்கு எதுவும் இல்லாவிட்டாலும் தனது அபிமான நடிகருக்காக கட் அவுட் பாலாபிசேகத்தோடு நிற்காமல் கோவிலில் வேண்டிக்கொள்வது வழக்கமாக உள்ளது.

1b9f0e59b6a644c33209ce79da064393

சமீபத்தில் பிகில் பட வெற்றிக்காக சில ரசிகர்கள் இப்படியாக கோவில் படிகளில் குறிப்பாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து பிகில் படம் வெற்றியடைய படிக்கட்டுகளில் ஏறி சென்றனர்.

இது போல ஆந்திராவின் முக்கிய ஹீரோவான நாகசைதன்யா பிறந்த நாளுக்கு இப்படி படியில் முட்டி போட்டு ஏறி திருப்பதி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் ஒரு ரசிகர்.

இதற்கு நாகசைதன்யாவின் மனைவியும் நடிகையுமான சமந்தா நெகிழ்ச்சியடைந்துள்ளார். அந்த ரசிகரை மீட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews