கையில் ஆல்கஹால் பாட்டில்களுடன் ரகுல் பிரீத் சிங் !!

ரகுல் பிரீத் சிங்  தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கன்னட மொழியில் கில்லி  பட ரீமேக்கின் மூலம் அறிமுகமானமானார். அதன்பின்னர் கெராட்டம் என்னும் தெலுங்கு படத்திலும், யுவன் என்னும் தமிழிப் படத்திலும் நடித்தார்.

இருப்பினும் தடையறத் தாக்க  திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தினைக் கொடுத்தது. இவர்  புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர் , தீரன் அதிகாரம் ஒன்று , என். ஜி. கே  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

76d85c2fea509cd5abd3ce9619f959ca

கொரோனா காரணமாக வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இவர் தனியாக யுடியூப் சேனல் துவக்கி உள்ளார். அவ்வப்போது உடற்பயிற்சி செய்தல், பியூட்டி டிப்ஸ், சமையல் டிப்ஸ் என பல வீடியோக்களைப் போட்டு அசத்திவருகிறார்.

நேற்று தமிழகத்தில் மதுக் கடைகள் செயல்படத் துவங்கிய நிலையில் நடிகை ரகுல் பிரீத்சிங் கையில் சில பாட்டில்களுடன் சாலையில் நடந்து சென்ற வீடியோ வெளியானது.

ரசிகர்கள் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பிவந்த நிலையில் ரகுல் கோபமாகப் பதில் கூறியுள்ளார். அதாவது, “நான் மெடிக்கல் கடையில் அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே வாங்கினேன். மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews