கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

காரசாரமா சாப்பிடணும் போல இருக்குதா … இந்த கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு செய்து பார்க்கலாமா…

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு- 100கிராம்,
துவரம்பருப்பு- 100 கிராம்
வெங்காயம்- 2,
பச்சைமிளகாய்-2,
தக்காளி – 2
பூண்டு- 4 பல் ,
கறிவேப்பிலை- சிறிதளவு
கடுகு – சிறிதளவு ,
உளுந்தப்பருப்பு- சிறிதளவு ,
வெந்தயம்-சிறிதளவு ,
மிளகாய் தூள்- 2 டிஸ்புன் ,
மல்லித்தூள் – 2 டிஸ்புன்
மஞ்சள் தூள் – அரை ஸ்புன்,
சோம்பு,சீரகம் – 1 டீஸ்புன்
உப்பு- சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக இரண்டு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு பரபர என அரைத்து கொள்ளவும் . பின் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு பொடியாக நறுக்கவும்.

அதை அரைத்த பருப்புடன் சேர்த்து உருண்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைக்கவும் .

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, கடுகு, உளுந்தப்பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்து கொள்ளவும். பின் வெங்காயம் ,தக்காளி போட்டு நன்கு வதக்கவும். கிரேவியாக வரும் வரை வதக்கவும்,

அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூன் மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, அதனுடன் சோம்பும் சீரகத்தூள் சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அந்த நேரத்தில் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews