ஜோதிடம்

நோய் தீர்க்கும் பன்னீர் இலை விபூதி!

புகழ்பெற்ற முருகன் ஸ்தலங்களில் ஒன்று திருச்செந்தூர். கடற்கரையோரம் அமைந்திருக்கும் அழகிய கோவில் சென்றால் வீட்டுக்கு திரும்பவே மனது வராத இடம் இது.

நல்ல கடற்கரை காற்று அத்தோடு கோவிலும் அங்கிருக்கும் முருகனும் நமது மனத்தை ஆறுதலாக்கி தருவார்கள் .

இந்த கோவிலில் தரப்படும் பன்னீர் இலை விபூதியானது மகத்துவம் வாய்ந்தது. பன்னீர் இலையில் வைத்து தரப்படும் முருகனின் அபிசேக விபூதியான இந்த விபூதி பலதரப்பட்ட நோய்களை தீர்த்து வைக்கும் குணம் கொண்டது.

இந்த பன்னீர் இலை விபூதி ஆதிசங்கரரின் நோய்களை குணப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விபூதியை தினமும் அணிந்து கொண்டால் உடல் நோய்கள் நீங்கி மனதைரியம் உண்டாகும் அனைத்தும் சித்திக்கும்.

திருச்செந்தூர் கோவில் செல்லும்போது இந்த பன்னீர் இலை விபூதியை கோவிலில் கேட்டு வாங்கி வாருங்கள்.

Published by
Abiram A

Recent Posts