ஒரேநாளில் பஞ்சபூத தலங்களை தரிசிக்கனுமா?! அப்ப சென்னைக்கு வாங்க!

இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதத்தினால் ஆனது. ஆதிக்கடவுளான சிவனுக்கும் பஞ்சபுத தலங்கள் இருக்கு.


நிலம்- ஏகாம்பரேஸ்வரர் கோவில், – காஞ்சிபுரம்,


நீர் – திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்- திருச்சி.


நெருப்பு – திரு அண்ணாமலையார்- திருவண்ணாமலை.


ஆகாயம் – நடராஜர் – சிதம்பரம்.


காற்று – காளத்தீஸ்வரர் – காளஹஸ்தி, ஆந்திரா.. என அமைந்திருப்பது நம்மில் பலபேருக்கு தெரியும். ஆனா, சென்னையிலும் இப்படி பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!


நிலம் -ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் – பாரிஸ் மின்ட்தெரு

நீர் -கங்காதீஸ்வரர் திருக்கோவில்- புரசைவாக்கம்.

நெருப்பு – அருணாசலேஸ்வரர்  திருக்கோவில் – பாரிஸ் பள்ளியப்பன்தெரு.

ஆகாயம்- சிதம்பரநாதர் திருக்கோவில் – சூளை

காற்று -காளஹதீஸ்வரர் திருக்கோவில் – பாரிஸ் பவளக்கார தெரு

அதனால், குறைந்த நேரத்திலும்,அதிகம் செலவில்லாமல் அலைச்சலில்லாமல் ஒரே நாளில் பஞ்சபூத தலங்களை தரிசித்து பலன் பெறுவோம்.

Published by
Staff

Recent Posts