இரண்டு நாய்கள் மட்டுமே நடித்து வெளியாக இருக்கும் ‘கிளவர்’ திரைப்படம்… அட… இது புதுசா இருக்கே…

உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘கிளவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த முழு நீள படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக வெளிவந்த சில படங்களில் நடிகர்களுடன் பாம்பு, குரங்கு, நாய், மாடு போன்ற விலங்குகள் நடித்திருப்பதை பார்த்திருப்போம். அதன் பிறகு ஒரு சில படங்கள் மட்டுமே விலங்குகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘கிளவர்’ திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேறு கதாபாத்திரங்கள் யாரும் இல்லாமல் முழுக்க முழுக்க இரண்டு நாய்களை மட்டுமே வைத்து உருவாக்கி உள்ளார் இயக்குனர் செந்தில் சுப்பிரமணியம். இந்த படத்திற்கு வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார், முத்துமுனியசாமி படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். ரகுநாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபக்கார்த்திகேயன், சஞ்சய் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை செந்தில் சுப்பிரமணியம் அவர்களே எழுதியுள்ளார். இயக்குனர் செந்தில் சுப்பிரமணியம் இப்படத்தைப் பற்றி கூறுகையில், இந்த படத்தின் கதையம்சம் இரண்டு நாய்களை சுற்றி இருக்கும்படி உருவாக்கி உள்ளோம். அம்மா நாயிடம் இருந்து குட்டி நாயை சைக்கோ ஒருவன் திருடி சென்றுவிடுகிறான்.

தனது குட்டி நாயை மீட்க அம்மா நாய் என்னவெல்லாம் செய்கிறது எப்படி மீட்டுக் கொண்டு வருகிறது என்பதை விறுவிறுப்பான கதைக்களத்தில் த்ரில்லாக இருக்கும்படி டைரக்ட் செய்துள்ளேன். கமர்ஷியலாக மக்கள் பார்த்து ரசிக்கும்படி இப்படம் இருக்கும். இது ஒரு புது முயற்சி. உலக திரைப்பட வரலாற்றில் இரண்டு நாய்களை மட்டுமே வைத்து எடுத்த முதல் திரைப்படம் இது தான். அடுத்த மாதம் ‘கிளவர்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்று கூறினார் இயக்குநர் செந்தில் சுப்பிரமணியம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...