பொழுது போகாத பிரபலங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகத்துக்கே இந்த நிலைமை என்பதால் யாரும் எதுவும் செய்யமுடியவில்லை இந்த நிலையில் இதிலிருந்து விடுபட ஒரே வழி 21 நாள் ஊரடங்கு கடைபிடிப்பதுதான் என்ற நிலையில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.


இதுதான் தங்கள் ரசிகர்களிடம் பேச சரியான தருணம் என சமூக வலைதளங்களில் லைவில் வருகின்றனர். கடந்த வாரங்களில் எஸ்.பி பி, ஹன்சிகா மோத்வானி, பார்த்திபன், உதயநிதி என பற்பல பிரபலங்கள் வலம் வருகின்றனர்.

என்ன செய்வது பெரிய பிரபலங்களாயிருந்தாலும் நம்மைபோல அவர்களும் மனிதர்கள் தானே என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.

வீட்டுக்குள்ளே இருந்து அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம். இது போல நேரத்தில் இது ஒரு நல்ல விசயம். எல்லா ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது அவர்களுடன் பேசுவது அவர்களுக்கும் மன அழுத்தத்தை குறைக்கும். நமக்கும் அவர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியை தரும்.

Published by
Staff

Recent Posts