லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடி அனைவரையும் அசத்தினார்
இன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மகளிர் தின விழிப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த விழிப்பு பேரணியில் கல்லூரி பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு மகளிர் தின விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்
இந்த பேரணியை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடங்கி வைத்தார். ஐந்து கிலோ மீட்டர் வரை சென்ற இந்த பேரணி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயன்தாரா இந்த பேரணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது