முகேஷ் அம்பானி நிறுவனங்களிலும் பணிநீக்கம்.. வீட்டுக்கு அனுப்பப்படும் 9000 ஊழியர்கள்..!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மற்றும் அவரது மகள் இஷா அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெட்ரோ கேஷ் அண்ட் கேரி இந்தியா நிறுவனத்தின் 31 ஸ்டோர்களை ரூ.2,850 கோடிக்கு நிறுவனம் வாங்கிய சில நாட்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் குரூப் கூறியபோது, ‘பணிநீக்க நடவடிக்கை என்பதும், நிறுவனம் மிகவும் திறமையானதாக மாறுவதற்காக மேற்கொள்ளும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். பாதிக்கப்படும் ஊழியர்களை அடையாளம் காணும் பணியை நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பணிநீக்க இழப்பீடு வழங்கப்படுவதோடு புதிய வேலைகளைக் கண்டறிய உதவும் என கூறியுள்ளது.

இந்த பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிச்சயம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர்களில் பலர் போட்டிச் சந்தையில் புதிய வேலைகளைத் தேட வேண்டியிருப்பதால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பணிநீக்க நடவடிக்கை என்பது ஊழியர்களின் மன உறுதியிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான முடிவு கடினமானது, ஆனால் போட்டித்தன்மையுடன் இருக்க ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் அவசியம் என்று நம்புகிறது. மறுசீரமைப்பு மிகவும் திறமையாகவும் லாபகரமாகவும் மாற உதவும் என்று நிறுவனம் நம்புகிறது என ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான காரணங்களை தெரிவித்துள்ளது.

Published by
Bala S