திரெளபதி படம் மூலம் பிரபலமானவர் அப்படத்தின் இயக்குனர் மோகன் ஜீ. இவர் கூறி இருப்பதாவது. திரெளபதி படம் வந்த போது எத்தனை பேர் பொங்கினீர்கள். இவ்வளவிற்கும் அப்பட்ம் ஒரிஜினலாக வந்த கதையின் அடிப்படையில் நீதிமன்றமே சொன்ன ஜட்ஜ்மெண்ட் காப்பியின் அடிப்படையில் தான் இயக்கப்பட்டது.
அந்த நேரத்தில் எத்தனை தலைவர்கள் பொங்கினீர்கள், தாழ்த்தப்பட்ட மக்களை காக்கிறேன் என சொன்ன தலைவர்கள் எல்லாம் அப்படத்துக்கு எதிராக பேசினீர்கள்.
நேற்று தாழ்த்தப்பட்ட மக்களை தவறாக ஒரு திமுக தலைவர் பேசினார் இப்போ எங்க போனிங்க நீங்க என மோகன் ஜி கேட்டுள்ளார்.
தலைமை செயலாளர் சண்முகம் தாங்கள் கட்சி உறுப்பினர்கள் கொடுத்த மனுக்களுக்கு உரிய முறையில் தங்களை சந்திக்காமல் இருந்ததால் தாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி இருந்தார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கும் கூட கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.