வருடக்கணக்காக எந்த அநீதியும் மாறவில்லை- மகேஷ்பாபு கடும் வேதனை

ஆந்திராவின் முன்னணி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் இளம் நடிகர் மகேஷ்பாபு. பிரின்ஸ் மகேஷ்பாபு ஆந்திராவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ரசிகர்களும் தமிழில் அஜீத், விஜய் ரேஞ்சில் அதிகமாக இருக்கிறார்கள்.

77c001e65387613fa37633368d3a0dfa

சமீபத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு ஆந்திர திரையுலகம் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

நடிகர் மகேஷ்பாபுவும் விரக்தியாக ஒரு பதிவை மேற்கொண்டுள்ளார் அதில் பல வருடமாக பல மாதமாக பல நாட்களாக ஒரு மாற்றமும் இங்கு இல்லை இது எனது தனிப்பட்ட கருத்து. மத்திய மாநில அரசுகள் அனைத்து விசயங்களிலும் தோல்வி அடைந்து வருகின்றன.

பெரிய அளவிலான க்ரைம்களுக்கு பெரிய அளவில் தண்டனை கொடுத்தால்தான் நன்றாக இருக்கும் என பிரதமருக்கும் மாநில முதல்வருக்கும் தான் வைக்கும் கோரிக்கை என மகேஷ்பாபு கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews