நாவில் எச்சி ஊறவைக்கும் மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல்!

உருளைக்கிழங்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு உணவாகும். உருளைக்கிழங்கை பலவிதமாக சமைக்க முடியும். அதில் ஒன்றுதான் மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல். இதை எப்புடி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து தோலுரித்தது)
எண்ணெய் – 1/4 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 6 பற்கள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:-

முதலில் ஒரு சமையல் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதில் சிறிதளவு பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அதை எடுத்து நன்கு மசித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த கூட்டுடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும் மிளகாய் தூள் வாசனை போகும்வரை கிளர வேண்டும்.

பிறகு அத்துடன் கடலை மாவு சேர்த்து 5 முதல் 8 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கினால், ருசியான மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் ரெடி!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews