கோவில் மணி ஓசையின் அர்த்தமென்ன?!


கோவில் மணியை போவோர் வருவோரெல்லாம் அடிக்கக்கூடாது. கோவில் மணியின் ஒவ்வொரு ஓசைக்கும் அர்த்தமுண்டு. கோவில் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம். கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.


மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம். மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். மணி அடிப்பதை மகான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும். பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக்கொண்டு கீழே வைக்க வேண்டும். இடது கையால் மணியை எடுக்கவும் கூடாது. வைக்கவும் கூடாது. கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். ஆலயத்தில் அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது. என்பதற்காகவே மணிகள் ஒலிக்கப்படுது

Published by
Staff

Recent Posts