கேடி என்கிற கருப்பு துரை எப்படி உள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கேடி என்கிற கருப்புத்துரை. இப்படத்தில் வித்தியாசமாக கதை சொல்லப்பட்டுள்ளது.


பெரிய மனிதர்கள் எல்லோருமே குழந்தை தனத்துடன் இரண்டு வயது குழந்தை கூட வயது முதிர்ச்சியுடன் தற்போதைய காலங்களில் பேசிவருவது மிக ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

அப்படியான காலமான இந்தக்காலத்தில் வ்யதாகி விட்ட காரணத்தால் வீட்டில் புறக்கணிக்கப்படுகிற ஒரு பெரியவர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் தஞ்சமடைகிறார்.

அங்கேயே வளர்ந்து வரும் குட்டி என்ற சிறுவனின் நட்பு பெரியவருக்கு கிடைத்து விட அவர்களுக்கு உள்ள நட்பு பற்றி விவரமாக விவரிப்பதுதான் கருப்புதுரை படத்தின் கதை.

மிக இயல்பான காட்சிகளில் அனயாசமாக நடித்துள்ளார் பேராசிரியராக நடித்துள்ள இராமசாமி. சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏதாவதொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

நடிப்பில் இவர் பின்னி விட்டார் என சொல்ல வேண்டும்.படத்தை இயக்கி இருப்பவர் பிரபல பெண் இயக்குனர் மதுமிதா.

சிறந்த முறையில் அழகான ஒரு படம் கொடுத்த மதுமிதாவுக்கு பாராட்டுக்கள். அனைவரும் காண வேண்டிய அற்புதமான திரைப்படம்.

Published by
Staff

Recent Posts