கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..

அந்தச் சிறுமி மட்டும் அப்பொழுது கண்ணதாசன் முன் வந்து பாடவில்லை எனில் இன்று நமக்கு காலத்தால் அழியாத பாடல்களை விட்டுச் சென்ற கவியரசர் கிடைத்திருக்க மாட்டார். ஆம். வாழ்க்கையின் வெறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணதாசனின் பாடல்கள் அருமருந்து. ஆனால் அவருக்கே ஒருமுறை விரக்தியின் உச்சத்தில் சென்ற போது அவரின் அறிவுக்கண்களை ஒரு சிறுமி திறந்து வைத்த சம்பவம்தான் பின்னாளில் அவரைக் கவியரசராக மாற்றியது.

கண்ணதாசன் ஆரம்பத்தில் சினிமாவில் பாடலாசிரியராய் வர வேண்டும் எனும் எண்ணத்தில்தான் இருந்துள்ளார். இருந்தாலும் மாடர்ன் தியேட்டர்ஸின் சண்டமாருதம் எனும் பத்திரிக்கையில் பணியாற்றியுள்ளார். பணியோ சேலத்தில். ஆனால் கவிஞருக்கு சண்டமாருதம் பத்திரிக்கை வேலை கண்ணதாசனுக்கு திருப்தி அளிக்காததால் அப்பத்திரிக்கை அதிபரிடம் சென்று ராஜினாமா கடித்தத்தை கொடுத்தாராம்.

ஆனால் அந்த அதிபருக்கு கண்ணதாசனை அனுப்ப மனமில்லாமல் தன்னுடைய சினிமா இலக்கிற்கு கதை எழுத அனுப்பிவிட்டாராம். பின் திரைக்கதை எழுத ஆரம்பித்தாராம். இருந்தாலும், பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இவர் எழுதிய கதைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அந்த நேரத்தில் கருணாநிதி மாடர்ன் தியேட்டர்ஸில் வந்து மிக பெரிய ஆளாக உருவெடுத்துள்ளார். அப்போது பொறுமை இல்லாத கண்ணதாசன் மறுபடியும் வேலையை ராஜினாமா செய்துவிட்டாராம் கவிஞர். மனமுடைந்து விரக்தியில் கோயம்புத்தூருக்கு செல்லும் ரயிலில் ஏறி செல்கிறார். இவ்வளவு திறமையிருந்தும் தனக்கு வாய்ப்பு இல்லையே என வருத்தத்தில் இருந்துள்ளார்.

முதல் படத்திலேயே இவ்வளவு பிரச்சனையா? பொல்லாதவனில் பொல்லாதவனாக மாறிய வெற்றி

அப்போது ரயிலில் கண் பார்வையற்ற சிலரை பார்க்க அவர்களை பார்த்தும் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இது ஒரு புறமிருக்க ரயிலில் எதர்ச்சையாக ஒரு பிச்சைக்காரர் வர அவரது கையில் ஒரு கண்பார்வை இல்லாத சிறுமி இருந்தாளாம்.

அப்போது அச்சிறுமி ‘சிறிதும் கவலை படாதே… மன உறுதியை மட்டும் விட்டு விடாதே’… என பாடியுள்ளார். அந்தப் பாடலைக் கேட்டு உத்வேகம் கொண்ட கண்ணதாசனுக்கு மனதில் தெளிவு பிறந்தது. பின் தனது இலக்கை நோக்கி செல்ல முதன்முறையாக இயக்குனர் ராம்நாத் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அப்போது காட்சிகளை இயக்குனர் சொல்ல கண்ணதாசன் ரயிலில் சந்தித்த குழந்தை பாடிய வரிகளை மனதில் வைத்து கொண்டு கன்னியின் காதலி திரைப்படத்தில் வரும் ‘கலங்காதே மனமே… உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே’ எனும் தனது முதல் பாடலை எழுதியுள்ளார். அதன்பின் கவிஞரின் திறமையை உலகமே அறிந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...