காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு ஹோ கயா நா என்ற இந்தித் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்தியில் அம்மணிக்கு பெரிய வரவேற்பு கிடைக்காமல் போக, இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். தென் இந்திய சினிமா இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது.
அதாவது 2008 ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் தோல்வி அடைய, மகதீரா இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகளைக் கொடுத்தது.
தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் இவை வதந்திகள் என்று மறுத்தார்.
மேலும் பேட்டியில் தொகுப்பாளினி வருங்கால கணவர் குறித்துக் கேட்க அவர் உடனே, “என் கணவர் ராஜகுமாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என் எண்ணங்களையும், லட்சியங்களையும் புரிந்து கொள்பவராகவும், பெண்களுக்கு மதிப்பு அளிப்பவராகவும் இருக்க வேண்டும். மற்றபடி தொழிலதிபர், நடிகர் என்ற பாரபட்சங்கள் ஏதும் இல்லை” என்று கூறியுள்ளார்.