இந்த வாழைப்பூ கோலா உருண்டையை செய்து கொடுங்க. சைவம்ன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க…

காய்கறின்னாலே இன்றைய குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அதிலும் கீரைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு மாதிரியான காய்கறிகளை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. வாழைப்பூவை சாப்பிட பிடிக்காதவர்களும் வாழைப்பூவில் கோலா உருண்டை செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என கேட்டு சாப்பிடுவாங்க.

தேவையான பொருட்கள்
வாழைப்பூ – ஒன்று
வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுகடலை மாவு – 250 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
வெள்ளை எள் அல்லது கசகசா – 100 கிராம்
முந்திரி – 10
புளித்த மோர் – ஒரு கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

ec8b7e120064ee0edfd41fb0c29e8d9a

செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கி, நீர்த்த மோரில் வெட்டிய எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேகவைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு, இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்துப் பிசையவும்.
இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். உருண்டையாக உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு எண்ணெய்யை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

அசைவ பிரியர்கள் மட்டுமல்ல சைவப்பிரியர்களும் இனி கோலா உருண்டை சாப்பிடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews