என்னுடைய வதந்திகளை படித்து ரசித்து வருகிறேன்… பிரியா பவானி சங்கர் பேச்சு!!

பிரியா பவானி சங்கர்  புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, தமிழக இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் இவருக்கு, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலினை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பிரபலமான இவருக்கு இல்லத்தரசிகள் முதல் அனைவரும் ரசிகர்களாயினர். அதன் பின்னர் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு மேயாத மான் படத்தின் மூலம் கிடைத்தது.


முதல் படமே மிகவும் பிரபலமானதை அடுத்து, கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்., தற்போது இவர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

இவர், தனது நீண்ட கால நண்பர் ராஜவேலைக் காதலித்து வருகிறார், இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். ஆனால் சில தினங்களாகவே இவர்களது காதல் ப்ரேக் அப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் பிரியா பவானி சங்கர் தங்களது காதல் பிரேக் அப் ஆகவில்லை என்று கூறியும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. தற்போது வதந்திகளை படித்து, ரசித்து வருவதாக ப்ரியா பவனி சங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

Published by
Staff

Recent Posts