திருச்செந்தூருக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்; மனைவி, குழந்தைகளுடன் சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அரசியல் தலைவர்கள் சினிமாத்துறை பிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

அதேபோல் இன்று பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவரது பிறந்த நாள் என்பதால் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் சன்னதி,சண்முகர் சன்னதி,பெருமாள் சன்னதி தட்சிணாமூர்த்தி சூரசம்கார மூர்த்தி ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தார்.

திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த சிவகார்த்திகேயன் உடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews