இன்று சீயான் விக்ரமின் பிறந்த நாள்

இயக்குனர் ஸ்ரீதரால் பட்டை தீட்டப்பட்டு தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் விக்ரம். என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானாலும், தந்து விட்டேன் என்ற இயக்குனர் ஸ்ரீதர் படம் இவரை ஓரளவு பேச வைத்தது.


ஆனால் அதன் பின்னர் இவர் நடித்த மீரா, காவல் கீதம், புதிய மன்னர்கள் எல்லாமே மிகப்பெரும் ஜாம்பவான்களின் படம். எதுவுமே ஓடாததால் ராசியில்லாத நடிகர் முத்திரையும் இவர் மேல் விழுந்தது.

பல வருடம் இது போல ராசியில்லா செண்டிமெண்ட் முத்திரை குத்தப்பட்ட விக்ரமுக்கு இயக்குனர் பாலா இயக்கிய சேது கை கொடுத்தது.

பாடல் படம் எல்லாம் அதிரி புதிரி ஹிட் ஆனது.

பிறகு தரணி இயக்கத்தில் வந்த தில் படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு மிக முன்னணி நடிகராக வளர்ந்து இன்று அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்.

இவர் முதல் படமான சேது படத்தில் சீயான் என்ற கேரக்டரில் நடித்ததால் இன்று வரை சீயான் விக்ரம் என்றே அழைக்கப்படுகிறார்.

இன்று இவரின் பிறந்த நாள். அவரை வாழ்த்துவோம்.

Published by
Staff

Recent Posts