ஒரு செல்பி எடுத்தது குற்றமா? யோகிபாபு திருமண வதந்தியில் சிக்கிய நடிகை புலம்பல்


f116fc9d3d8748d26571e2c5df280689

யோகி பாபு திருமண வதந்தி குறித்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை, தான் ஒரு செல்பி எடுத்தது குற்றமா? என புலம்பிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

யோகி பாபுவுக்கும் நடிகை சபீதாராய்க்கும் திருமணம் ஆகிவிட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வதந்தி ஒன்று பரவியது. இதனை அடுத்து யோகி பாபு தனது டுவிட்டரில் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது அந்த வதந்தி புகைப்படத்தில் இருக்கும் நடிகை சபிதாராய் தனது பங்கிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

யோகிபாபு அவர்களும் நானும் கடந்த 2017 ஆம் ஆண்டு ’கன்னிராசி’ என்ற படத்தில் நடிக்கும்போது எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்தான் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கும் திருமணம் புகைப்படம் வேண்டும், எனக்கும் அவருக்கும் திருமணம் என்பது என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் யோகிபாபுவுடன் தான் தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதாகவும் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறிய சபீதாராய், யோகிபாபு தனக்கு நல்ல நண்பர் என்றும் அந்த நட்பை கெடுக்கும் அளவிற்கு இந்த வதந்தி பரவி வருவது தனது வருத்தத்தை அளிப்பதாகவும் கூறி உள்ளார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews