மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்களுக்கான கலைஞர்களுக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இன்று தேசிய விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதினை தகுதி பெற்ற கலைஞர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்.
தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் திரைப்படம் பெறுகிறது.
விழா முடிந்த பிறகு விருது பெற்ற கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரு. ராம்நாத்கோவிந்த் அவர்கள் விருந்தளிக்கிறார்.