ஜனதா கர்ஃப்யூ மொட்டை மாடி பால்கனியில் கை தட்டிய பிரபலங்கள்

ஜனதா கர்ஃப்யூ ஊரடங்கு உத்தரவு நேற்று முழுவதும் அமல்படுத்தப்பட்டது. மாலை 5மணிக்கு வெளியில் மொட்டை மாடிகு வந்து மக்கள் கை தட்டும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இது சரியான முறையில் ஊரடங்கு நடந்தது என்பதற்காகவும், இந்த நேரத்தில் அயராது பாடுபடும் செவிலியர்களுக்காகவும் மருத்துவ பணியாளர்களுக்காகவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது.


பொதுமக்கள் எல்லோரும் வெளியில் வந்து கைதட்டினர். நடிகர் விஜயகாந்த், பிரபு, அர்ஜூன், இயக்குனர் ஆர்.வி உதயகுமார், ஐஸ்வர்யா ராய், முன்னாள் துணை பிரதமர் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் வெளியில் வந்து கைதட்டினர்.

Published by
Staff

Recent Posts