கடந்த டிசம்பரில் சீனாவின் ஊகான் நகரில் ஏற்பட்ட கொடூர வைரஸான கொரொனா என்ற கோவிட் 19 உலகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எல்லா நாடும் என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்து வருகின்றன. கடை திறக்காமல் அலுவலகங்கள் திறக்காமல் பலரும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொடூர வைரஸை பரப்பிய சீனாவில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
அங்கு குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டனர். பள்ளி செல்லும் குழந்தைகள் பல கட்ட பரிசோதனைக்கு பின்னே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.