கண்ணுக்குள்ளே, ராமர் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகை அனுமோல். இவர் சமீபத்திய நாட்களில் சமூக வலைதளங்களில் ரசிகர் ரசிகைகளோடு உரையாடும்போது, சில குறும்பு பிடித்த ரசிகர்கள் ஆபாசமாக எதையாவது பகிர்கிறார்களாம்.
இதை பார்த்து கோபமாகும் அனுமோல் அவர்களை ப்ளாக் செய்து செய்தே ஓய்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் சிலர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அனுமோல் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு மேலும் இது தொடர்ந்தால் தான் சைபர் கிரைமில் புகார் தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார் இவர்