கங்கை அமரனில் ஆரம்பித்து அவரது மகன்களான வெங்கட் பிரபு , பிரேம்ஜி என குடும்பத்தினர் அனைவருமே கொஞ்சம் நக்கல் பிடித்த ஆசாமிகள்தான் எப்போதும் ஜாலியாக எழுதுவதும் பேசுவதும் இவர்களது வாடிக்கை. இவர்களது படங்களின் மூலம் இதை அறியலாம்.
சமீபத்தில் பல இடங்களில் சலூன் கடைகள் லாக் டவுனை ஒட்டி இயங்கவில்லை. இதனால் பலரும் மிகப்பெரிய அளவில் முடி, தாடியுடன் அலைகின்றனர்.
இதையும் நக்கல் அடித்துள்ள பிரேம்ஜி இரண்டு மாதங்களுக்கு பிறகு ஷேவ் செய்து சின்னப்பையன் போல மாறிவிட்டதாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.