இயக்குனர் சசிக்குமார் நடிகர் விஜயை வைத்து சரித்திர படம் இயக்குவதாக சில வருடங்கள் முன் பேச்சு அடிபட்டது. பின்பு அது பற்றிய செய்திகள் முடங்கியது. அந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து சில நாட்களுக்கு முன் சமூக வலைதள நேரலையில் பேசிய சசிக்குமார் இவ்வாறு கூறி இருக்கிறார்.
விஜய்க்காக சரித்திரக்கதை தயார் செய்து அவரிடம் காண்பித்தது உண்மைதான். விஜய்க்கும் கதை பிடித்திருந்தது ஆனால் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் இயக்க முடியவில்லை.
எனினும் வரும் காலத்தில் அப்படத்தை இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சசிக்குமார் தெரிவித்துள்ளார்.