அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் கோவில் பூஜைகள் முடிந்து அம்மன் ஊஞ்சல் ஆடியதாக கூறப்படுகிறது.


இரவு 8.30மணியளவில் கோவில் நடை சாற்றிவிட்டு சிசி டிவி காமிராவை செயல் அலுவலர் கண்காணித்தபோது பரபரப்பு ஏற்பட்டது. ஒரு உருவம் கோவில் முன்பு உள்ள திரைச்சீலையில் அசைவதை பார்த்தனர் இந்த நிகழ்வு இரண்டு மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கருவறை உள்ளே போவதும் வருவதுமாக அந்த உருவம் இருந்ததாம்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த போது சிசிடிவியில் எதுவும் உள்ளதா வேறு ஏதுவும் கூடு கட்டியுள்ளதா என ஆராய்ந்து பார்த்தபோது அப்படி எதுவும் இல்லை என தெரிந்தது.

அம்மனே ஊஞ்சல் ஆடி தரிசனம் தந்துள்ளதா என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Published by
Staff

Recent Posts