Categories: ஜோதிடம்

விரைவில் பாதச்சனி -எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி- தனுசு

விருச்சிகராசியினருக்கு தற்போது ஏழரைச்சனியின் இறுதிக்கட்டமான பாதச்சனிக்காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது 2020 ஜனவரியில் முடிவடைகிறது. நீண்ட நாட்கள் ஏழரை சனியால் துன்பத்தை அனுபவித்த விருச்சிகராசியினர் புதுப்பொலிவு பெறுகின்றனர்.


அதே நேரத்தில் தற்போது ஏழரைச்சனியால் கடும் விளைவுகளை சந்தித்து வரக்கூடிய ஜென்மச்சனி காலகட்டத்தை உடைய தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனியின் பெருமளவு தாக்கம் 2020 ஜனவரியில் குறைந்து விடும். ஜென்மச்சனியில் இருந்து பாதச்சனி ஆரம்பித்து விடும். இப்போது இருக்கும் ஜென்மச்சனி அளவு கடும் பிரச்சினைகள் இருக்காது என்றாலும் ஏதாவது தடங்கல் பிரச்சினைகள் எதிர்பாராமல் ஏதாவது பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வது என ஏழரைச்சனிக்காலம் முழுவதும் சின்ன சின்ன தொந்தரவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

அதனால் இவர்கள் இறைவழிபாடு தொடர்ந்து மனம் தளராமல் செய்துவருவதே நலம் பயக்கும்.

காலபைரவர் வழிபாடு தொடர்ந்து செய்துவரலாம். சனீஸ்வரனின் குருவான காலபைரவரை வழிபட்டால் கைமேல் பலன் உண்டு.

Published by
Staff

Recent Posts