பிரபல நடிகை கொடுத்த பாலியல் புகார்: ஒளிப்பதிவாளர் அதிரடி கைது


பிரபல நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரால் ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விஜய்தேவரகொண்டா நடித்த தெலுங்கு திரைப்படமான ’அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் நடிகை சுதா ரெட்டி. இவரும் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஷ்யாம் ரெட்டி திடீரென சுதாரெட்டியை திருமணம் செய்ய மறுத்ததாகவும், இதனால் அவர் மீது சுதாரெட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த புகாரில் தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும் சுதாரெட்டி குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஷ்யாம் கே.நாயுடுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
Staff

Recent Posts