BIGG BOSS விக்ரமனுக்கு வந்த சோதனை : பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு!

பிக்பாஸ் சீசன் 7 தற்போது ஸ்டார் விஜய்-ல் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சீசனை ஒப்பிடும் போது இந்த சீசனில் ஜோவிகா, கூல் சுரேஷ், விசித்திரா என போட்டியாளர்கள் பங்கேற்று இந்த சீசனை தினமும் விறுவிறுப்புக்கு பஞ்மில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் முந்தைய பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களும் அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது நிகழ்வுகளை பதிவு செய்து வருகின்றனர். சீசன் 6 இறுதிச் சுற்றில் அசீம், விக்ரமன், ஷிவின் இடையே கடும்போட்டி நிலவிய நிலையில் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் பெற்றார்.

சர்ச்சையில் விக்ரமன்

சீசன் 6ல் இரண்டாம் இடம் பெற்ற விக்ரமன் தற்போது பெண் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த  லண்டனில் முனைவர் பட்டம் படித்த கிருபா என்ற இளம் பெண் விக்ரமன் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்றும் மேலும் லட்சக்கணக்கில் பணம் பெற்று அதை முழுமையாக தரவில்லை என்று புகார் கூறிய நிலையில் அதற்கு விக்ரமன் பதில் அறிக்கையையும் ஆதாரமாக ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டு அவ்விவகாரத்திற்கு தற்காலிமாக முற்றுப்புள்ளி வைத்தார்.

Vikraman

இதனையடுத்து கிருபா தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.  இதனையடுத்து இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பி தற்போது வடபழனி காவல் நிலைய போலீசார் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல் வன்கொடுமை, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை, பெண் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, அவதூறாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளும் இதில் அடங்கும்.

இதனால் விக்ரமன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அறம் வெல்லும் என்ற வாசகத்தை தன்னுடைய தாரக மந்திரமாகக் கொண்ட விக்ரமனுக்கு இப்படி ஒரு வழக்கு பாய்ந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வி.சி.க கட்சியில் செய்தி தொடர்பாளராக இருக்கும் விக்ரமன் இது குறித்து என்ன பதில் அறிக்கை தரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...