இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் திருவிழா என்றால் அதனை ஐபிஎல் தொடர் என்றே கூறலாம். அந்தப்படி ஐபிஎல் போட்டியானது ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும். அவை இந்த ஆண்டும் கோடை காலத்தில் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக சில மாதங்கள் தடை செய்யப்பட்டு தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த ஐபிஎல்லில் தற்போது பலம் வாய்ந்த அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி காணப்படுகிறது. மேலும் இன்றைய தினம் ஒரே நேரத்தில் இரு போட்டிகள் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக ப்ளே ஆஃப் உள்நுழைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது
.
மேலும் முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பில் 164 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின்னர் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத்திலேயே கோலி மற்றும் படிக்கல் விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின்னர் நிதானமாக ஆடிய ஏபி டிவிலியர்ஸ் மற்றும் பரத் ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் பரத்தின் கூட்டணியில் ஆர்சிபி அணி தற்போது வெற்றியை அடைந்துள்ளது .
இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.