இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 404 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து உள்ளது. இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்த நிலையில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்னில் அவுட் ஆனாலும் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் அஸ்வின் அதிரடியாக விளையாடி 58 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 404 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது .