தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோ வைரலான நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிடிஆர் குறித்த இரண்டாவது ஆடியோவை வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாவது ஆடியோவில் ’ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கையை நான் அரசியலுக்கு வந்த முதல் நாள் முதல் ஆதரவளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான், அந்த கட்சியில் கட்சித் தலைவர் ஒருவராகவும் பிரதமர் ஒருவராகவும் இருக்கின்றனர். கட்சியையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்து இருக்க வேண்டும் என்பதுதான் சரியானது
ஏற்கனவே முதல் வீடியோவில் தமிழக முதலமைச்சரின் மகனும் மருமகனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது என்பது தெரிந்தது.