அண்ணா நீ தெய்வம் படத்தின் பெயர் அவசர போலீஸ் 100 என மாற என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பல திரைப்படங்களில் நடித்து அது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது அறிந்ததே. ஆனால் அவரால் எப்போது படம் நடிக்க முடியாமல் போனது என்று யாருக்காவது தெரியுமா?..

ஸ்ரீதர் இயக்கிய உரிமை குரல் என்ற படத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர், லதா நடித்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் எம்ஜிஆர் மற்றும் லதா நடிப்பில் மற்றொரு படத்தை இயக்க நினைத்தார். அந்த படத்தின் பெயர் தான் அண்ணா நீ என் தெய்வம். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அந்த சமயத்தில் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால் எம்ஜிஆர் இந்த படத்தில் இருந்து முழுமையாக விலகி முழு நேர அரசியலில் களமிறங்கினார். தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவரால் இந்த சமயத்தில் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. அது மட்டும் இன்றி தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார்.

அதன் பிறகு அண்ணா நீ என் தெய்வம் படத்தின் தயாரிப்பாளர் எம்ஜிஆரை பார்த்து இந்த படத்திற்காக அதிக பணம் செலவு செய்து விட்டேன் என்றும், இந்த படத்தை எப்படியாவது முடித்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர் இந்த படத்தை முடிக்க வாய்ப்பு இல்லவே இல்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் எம்ஜிஆர் நடித்த அண்ணா நீ என் தெய்வம் என்ற திரைப்படம் முழுமை பெறாமல் இருப்பதை பாக்கியராஜ் கேள்விபட்டு அந்த படத்தின் கதையை பார்க்க விரும்பினார். பின்னர் அந்த படத்தை பார்த்ததும் அவர் அதில் உள்ள காட்சிகளை அதிகமாக பயன்படுத்தி திரைக்கதை அமைத்து ஒரு புதிய படத்தை எடுக்க விரும்பினார். இந்த விருப்பத்தை எம்ஜிஆரை சந்தித்து பாக்கியராஜ் கூறிய போது அவரும் இதற்க்கு சம்மதித்துள்ளார்.

எம்ஜிஆர் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார். இந்த படத்தின் பூஜை 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், பாக்கியராஜ் ஏற்கனவே நிறைய படங்களை ஒப்புக் கொண்டு தனது வரிசையில் வைத்திருந்ததால் அவற்றை முடித்து விட்டு தான் அவசர போலீஸ் 100 படத்திற்கு வந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகும் போது எம்ஜிஆர் உயிருடன் இல்லை என்பதால் எம்ஜிஆர் அவர்களின் மதிப்பிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் பாக்யராஜ் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த படம் கடந்த 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையில் வெளியானது. பாக்கியராஜ் இயக்கிய இந்த படத்தில் இரண்டு வேடங்களில் பாக்கியராஜ்,கவுதமி,சில்க் சுமிதா வைத்து எம்ஜிஆர், லதா, நம்பியார், பி.எஸ் ராகவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடித்த காட்சிகளை பாக்கியராஜ் தனது அவசர போலீஸ் 100 படத்தில் பயன்படுத்தி கொண்டார்.

இந்த படத்தின் கதையின் படி எம் ஜி ஆரின் தங்கையாக சங்கீதா இருந்தார். அவரை நம்பியார் காதலிப்பது போல் நடித்து ஒரு குழந்தையை கொடுத்து கைவிட்டு விடுவார். இந்த நிலையில் நம்பியாரை தேடி கண்டுபிடித்து அவரை தனது தங்கைக்கு திருமணம் செய்து வைப்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.

இந்த படத்தில் எம்ஜிஆர் நடித்த காட்சிகள் மற்றும் பாக்யராஜின் ஸ்டைல் இருந்ததன் காரணமாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் கம்போஸ் செய்திருந்தார். அதிலிருந்து சில பாடல்களை பாக்யராஜ் பயன்படுத்திக் கொண்டார். அதை தவிற மீதமுள்ள பாடல்களை பாக்யராஜ் கம்போஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...