அனைத்து செயல்களிலும் வெற்றியை கொடுக்குaம் பெருமாள் மூல மந்திரம்..


எடுத்த காரியம் சிறப்புற நடந்தேற இறைவன் அருள் அவசியம் தேவை. கலியுக கடவுளாம் பெருமாளின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் எல்லா காரியத்திலும் வெற்றி கிட்டும்.

பெருமால் மூலமந்திரம்..

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் நஹி தைவதம்
த்வதன்யம் நஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனேதத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே நாராயண ஹ்ருதயம்


பொருள்:

திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், எல்லா வழிகளிலும் அருளவேண்டும். திருமாலே, நமஸ்காரம்.

இம்மந்திரத்தினை புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் பெருமாள் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.

Published by
Staff

Recent Posts