NTR ஆல் நடந்த சம்பவம்… மேடையில் கெஞ்சிய அனுபமா…

கேரளத்து திரிச்சூரில் பிறந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் வாயிலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் வரும் ‘ஏ சுழலி’ என்ற பாடல் மூலம் தமிழ் பட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி பிரபலமானார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இறுதியாக ‘தில்லு ஸ்குயர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அந்த படத்தின் சக்ஸஸ் மீட்- ஐ படக்குழுவினர் நடத்தினர். அதில் அனுபமா பரமேஸ்வரன் கலந்துக் கொண்டார்.

அதில் மேடையில் அனுபமா பரமேஸ்வரன் தனது ரசிகர்களிடம் பேசுவதற்காக மைக்கை கையில் எடுத்து பேச ஆரம்பிக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொள்வதற்காக ஜூனியர் NTR அங்கே என்ட்ரி கொடுத்தார். அவரை பார்த்த NTR இன் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

மேடையில் பேசுவதற்காக காத்திருந்த அனுபமாவை கண்டுகொள்ளாமல் ரசிகர்கள் NTR ஐ நோக்கி கூச்சலிட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பாகி போன அனுபமா பரமேஸ்வரன் தயவு செஞ்சு ஒரு நிமிடம் எனக்கு தாங்க நான் நன்றி சொல்லிவிட்டு கிளம்புகிறேன் உங்கள் நேரத்தை வீணடிக்கமாட்டேன் என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...