எஸ்.ஜே.சூர்யா இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவரது முதல் படமான வாலி செம ஹிட், இவரை நினைக்காத அளவு ஹிட் கொடுத்த படம் என்றுகூட சொல்லலாம். அதேபோல் இவர் “தல”யை அடுத்து விஜயை வைத்து குஷி படத்தினை எடுத்து அதையும் மாஸ் ஹிட் ஆக்கினார்.
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும், வாலி மற்றும் குஷி இன்றும் பலரால் விரும்பிப் பார்க்கும் படமாக இருந்து வருகின்றது. மேலும் இவர் நியூ , அன்பே ஆருயிரே, இசை, புலி என பல படங்களை இயக்கியும் உள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யட்சன், மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மெர்சல் படத்திற்காக சிறந்த வில்லனுக்கான விருதினையும் பெற்றார்.
எஸ்.ஜே.சூர்யாவின் பழங்கால வீடியோ ஒன்று தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “என் வாழ்க்கையில் நான் நன்றிக்கடன் பட்டுள்ள நபர் அஜித் அவர்கள்தான்.
நான் ஒரு காலத்துல சட்டைல பட்டன் இல்லாமல், பின்னும் போட்டும், பாரகான் செருப்பில் ஊக்கு போட்டு இருக்கும்போதும் என்னை என் இயக்குனர் என்று சொன்னவர் அஜித் சார். நான் இன்று ஒருநல்ல சட்டை போட்டிருக்க காரணமாக அவர் இருந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.