சரண் மேல் தீவிர நம்பிக்கை வைத்த அஜீத்.. கதையே கேட்காமல் நடித்த காதல் மன்னன்

நடிகர் அஜீத்துக்கும் – இயக்குநர் சரணுக்கம் அப்படி ஓர் ஒற்றமை உண்டு. அஜீத் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர் இயக்குநர் சரண். காதல் கதையுடன், ஆக்சன் மசாலாவையும் கலந்து இவர்கள் காம்போ கொடுத்த படங்கள் அனைத்துமே ஹிட் ரகம் தான். காதல் மன்னனில் ஆரம்பித்த இவர்கள் பயணம் தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தது. மேலும் பரத்வாஜின் இசையும் அஜீத் பாடல்களின் வெற்றிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அஜீத்துடன் தொடர்ந்து பயணித்த சரண் பின் கமலை வைத்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பிரசாந்த் நடிப்பில் பார்த்தேன் ரசித்தேன், மாதவன் நடிப்பில் ஜே.ஜே., விக்ரம் நடித்த ஜெமினி போன்ற ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளார்.

தாயின் இறப்புக்குக் கூட போக முடியாமல் தவித்த நாகேஷ்.. சிரிக்க வைத்த கலைஞனுக்குப் பின்னால் இப்படி ஒரு சோகமா?

இந்நிலையில் காதல் மன்னன் படம் பற்றி இயக்குநர் சரண் பேட்டிஒன்றில் கூறுகையில், “ ஆசை படம் பார்க்கும்போதே அஜீத் ஒரு பெரிய நடிகரக வருவார் என எனக்கு தோன்றியது. விவேக் மூலம் அவரை சந்தித்தேன். உடனே நடிக்க சம்மதித்தார். ‘கதை சொல்லட்டுமா?’ எனக் கேட்க அவரோ ‘நீங்கள் கேபி சாரின் உதவியாளர். இது உங்களுக்கு முதல் படம். கண்டிப்பாக நல்ல கதையைத்தான் உருவாக்கி இருப்பீர்கள். நான் நடிக்கிறேன்’ என சொன்னார். அப்படி உருவானதுதான் காதல் மன்னன் திரைப்படம்’ என அவர் சொன்னார்.

அஜித்துக்கு முன்பெல்லாம் ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த இயக்குனரிடமும் முழுக்கதையை கேட்க மாட்டார். ஒரு வரிக் கதையை மட்டுமே கேட்பார். ஒரு இயக்குனரை நம்பியே அஜித் படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாகத்தான் முழுக்கதையையும் அவர் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதில் உண்மை இருக்கிறதா என தெரியவில்லை.

தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜீத். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews