அறிவாற்றலில் சிறந்து விளங்க முருகனின் காயத்ரி மந்திரத்தினை சொல்லுங்க!!

அறிவாற்றலில் சிறந்து விளங்க குருபகவானை வேண்டிக்கொள்ள பெரியவர்கள் சொல்வார்கள். குருபகவானின் அதிபதி திருச்செந்தூர் முருகனாகும். அதனால், முருகன் அருளும், குருவருளும் சேர்ந்து கிடைக்க சொல்லவேண்டியது முருகன் காயத்ரி மந்திரமாகும். கீழ்க்காணும், இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

பொருள்; தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.

Published by
Staff

Recent Posts