“நடிகன்னா என்ன கடவுளா?“ நிருபரின் கேள்விக்கு நச் பதில் சொன்ன எம்.ஆர்.ராதா..

இன்று ஒரு திரைப்படத்தில் நடித்தாலே அந்த ஹீரோவை தனது தலைவனாகக் தூக்கிக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். திரையில் தான் தங்களது தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி எனப் பல ஆளுமைகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக படத்தை மட்டும் பாருங்கள், ரசியுங்கள், உங்கள் தலைவனைத் திரையில் தேர்ந்தெடுக்காதீர்கள் என நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல அப்பவே சொல்லியிருக்கிறார் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசும் குணம் கொண்ட எம்.ஆர்.ராதா மிகவும் சுயமரியாதையோடு வாழ்ந்தவர். தன்மானத்திற்கு ஒரு இழுக்கு என்றால் உடனே கொதித்து எழுந்துவிடுவார். எவ்வளவு பெரிய நடிகர், இயக்குனர் என்றாலும் அவர்களிடம் கோபத்தை காட்டி விடுவாராம்.

ஆனால் அதேநேரம், அவர் மிக நல்ல மனிதரும் கூட. அதனால்தான் அவரின் கோபங்கள் அனைத்திலும் ஒரு நியாயம் இருக்கும். இவரின் நடிப்பில் வெளிவந்த ரத்தக்கண்ணீர் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பெரியார் மற்றும் அண்ணா மீது அன்பு கொண்டிருந்தவர். தனது நாடகங்களில் புரட்சிகரமான கருத்துக்களை பேசியதோடு, கடவுள் நம்பிக்கையை கடுமையாக கிண்டலடித்தவர்.

பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர மணிவண்ணன் செஞ்ச முரட்டு சம்பவம்..மிரண்டு போன இயக்குநர் இமயம்

இதனால் பல எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார். ஆனாலும், எப்போதும் யாருக்காவும் அவர் பயந்தது இல்லை. இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொண்டார். அதை எப்போதும் எங்கும் அவர் மறைத்தது இல்லை. இவரின் வாரிசுகள் எம்.ஆர்.வாசு, வாசு விக்ரம், ராதாரவி, ராதிகா, நிரோசா என பலரும் சினிமாக்கு வந்தார்கள்.

செய்தியாளர் சந்திப்போ இல்லை பத்திரிக்கையாளர் பேட்டியோ எதையும் மறைக்காமல் அப்படியே பேசுபவர் எம்.ஆர்.ராதா. ஒருமுறை அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் ‘எப்படி எப்போதும் ஒளிமறைவு இல்லாமல் உங்களால் பேசமுடிகிறது?’ எனக்கேட்க அதற்கு எம்.ஆர்.ராதா சொன்ன பதில் இதுதான்.

ஒரு நடிகனின் நிறை மட்டுமல்ல. அவனின் பலவீனங்களையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீது இருக்கும் பிம்பம் மாறும். பொய்யாகவோ, இல்லாததையோ சொல்லி ஒரு போலி இமேஜை உருவாக்குவதில் எனக்கு விருப்பமில்லை’ என சொன்னார் எம்.ஆர்.ராதா.

அதேபோல், நடிகர்களுக்கு நடிப்பு என்பது அவர்களின் தொழில். அவர்களை கடவுளாகவோ, தலைவனாகவோ பார்ப்பது முட்டாள்தனம். அவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று அடித்தாற் போல சொன்னவரும் எம்.ஆர்.ராதாதான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...