சிறப்பு கட்டுரைகள்

உழவு தொழிலுக்கு மாடுகளை பயன்படுத்த காரணமென்ன?!


c7ae67c920f6e43c27a29c279f13613d-1

ஒருமுறை நந்தி பகவானிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதமொருமுறை உணவு சாப்பிட மனிதர்களிடம் தான் சொன்னதாய் சொல்லிவிட்டு வா! என பூலோகத்திற்கு அனுப்பினார். ஆனால், நந்திபகவானோ தினத்துக்கு சாப்பிட்டு மாதமொரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க ஈசன் சொன்னதாய் சொல்லிவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஈசன், பூமியில் பிறந்து மனிதர்களோடு உழவுத்தொழிலில் ஈடுபடுவாயாக! என சாபமிட்டார். கடுமையான வேலைகளையும், மனிதர்களின் கோவத்தினையும் நினைத்து நந்திபகவான் கலங்கி நிற்க, வருடத்திற்கொருமுறை உனக்கு விழா எடுத்து உனக்கு மனிதர்கள் நன்றி செலுத்துவார்கள்ன்னும் அருளினார்.

அன்றிலிருந்து உழவு தொழிலுக்கு மாடுகளை பயன்படுத்த ஆரம்பமானது.

Avatar photo
Staff