மீண்டும் தொடங்கியது போட்டி.. 171 இலக்கு.. சிஎஸ்கே வெற்றி பெறுமா?

சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் இறுதி போட்டி மழை காரணமாக தடைபட்டது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது. 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடி நிலையில் முதல் ஓவரின் மூன்று பந்துகள் போடப்பட்ட நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது.

இந்த நிலையில் நள்ளிரவு 12 10 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு சிஎஸ்கே அணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சிஎஸ்கே அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெறுமா? சாம்பியன் கோப்பையை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Published by
Bala S

Recent Posts