வெள்ளை மாளிகையில் யஜூர் வேதம்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் கடும் பிரச்சினைகள் எழுந்து வருகிறது. அரசும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து வரும் நிலையில் விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகள் எடுத்து விட்டாலும், மெய்ஞானரீதியாகவும் நல்ல முயற்சிகள் எடுக்க வேண்டுமல்லவா அதன் படி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் விலகலுக்கு சர்வமத பிரார்த்தனை நடந்தது.


அங்குள்ள சுவாமி நாராயண் கோவிலின் அர்ச்சகர் ஹரிஷ் பிரம்பாட், யஜூர் வேதத்தில் இருந்து வேத மந்திரங்களை ஓதினார். பின்னர் அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் சொன்னார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற வெள்ளை மாளிகையில் இந்தியாவின் ஹிந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட வேத மந்திரங்கள் ஓதப்பட்டதால் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் எஸ்.வி சேகர் ஸ்டார்ட் மியூசிக் என டுவிட் போட்டுள்ளார்.

Published by
Staff

Recent Posts