விஜய் சேதுபதி படத்தின் கதை இதுதான்: சேரன் அறிவிப்பு



சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது டுவிட்டரில் சேரன் அவர்கள் கூறியதாவது:

தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம் என்று பதிவு செய்துள்ளார்.

Published by
Staff

Recent Posts