வீட்டு வாசலில் கண் திருஷ்டி விநாயகர் சிலைகளை இப்படித்தான் வைக்கவேண்டும்..


கண் திருஷ்டி பிள்ளையாரை வீட்டில் வைப்பது பரவலாய் உள்ள வழக்கம். அதுமாதிரி வைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்..


வீட்டின் தலைவாசலுக்கு எதிராக, பார்வையில் படும்படி, கண்திருஷ்டி விநாயகர் சிலையை வைப்பது. வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார். விநாயகரை முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாகத்தான் வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணமும், மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும்.


ஏன் இப்படி வைக்கனும் என தெரிந்துக்கொள்ளலாம்.. ஏதேனும் ஒரு உள்அறையில்  விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேரும். அதனால் அதனை ஈடு செய்யும்  விதமா மற்றொரு சிலையை எதிர்திசையில் வைக்க வேண்டும்.  

Published by
Staff

Recent Posts