உடல் வலுப்பெற ஆஞ்சிநேயர் மூலமந்திரத்தினை சொல்லுங்க..



அறிவு, ஆஸ்தி, அழகு என எத்தனை இருந்தாலும் உடல் வலிமையுடன் இருந்தால்தான் குடும்பத்தையும், பாடுபட்டு சேர்த்த பொருளையும் கட்டி காக்கமுடியும். உடல் வலிமைக்கு ஆஞ்சிநேயரையே உதாரணமாக சொல்வார்கள். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிப்பட்டால் பலன் கிடைக்கும்.

ஆஞ்சிநேயர் மூல மந்திரம்..

ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாயலங்கா வித்வம்ஸனாய;

அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய, 

ஸாகினீடாகினீவித்வப்ஸனாய,

கிலகிய பூபூ காரினேவிபீஷணாய,

ஹனுமத் தேவாய,

ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா 


ஆஞ்சிநேயர் மூல மந்திரத்தின் பொருள்: செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.

இதை உடல், உள்ளத்தூய்மையோடு ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டு பூஜையறையிலோ அல்லது கோவில்களிலோ தொடர்ந்து சொல்லிவர உடல் வலிமை பெறும். அவ்வாறு, மந்திரம் சொல்லும் நாட்களில் அசைவத்தினை தவிர்க்க வேண்டும்.

Published by
Staff

Recent Posts